நேரு அகில உலகப் புகழ் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார். சர்வதேசப் பிரச்சினைகளில், நேருவின் கருத்துக்கு உலக நாடுகள் மதிப்பளித்தன. நேருவுக்குப்பின் ஆட்சிக்கு வந்த சாஸ்திரி, திறமையாக செயல்படுவாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால், அனைவரும் வியக்கும் வகையில் திறமையாக ஆட்சி புரிந்தார் சாஸ்திரி. 1958 அக்டோபர் 8_ந்தேதி ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய அயூப்கான், காஷ்மீரைக் கைப்பற்ற சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் படைகள் அடிக்கடி எல்லையைத் தாண்டி வந்து இந்தியப்பகுதியை நோக்கி பீரங்கித் தாக்குதல் நடத்தி வந்தன. 1965_ம் ஆண்டு, ஏப்ரல், மே மாதங்களில் காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதிக்குள் பாகிஸ்தான் படையினர் ஊடுருவி வந்தனர். ஆகஸ்ட் 8_ந்தேதி, ஆயுதம் தாங்கிய 3 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் கொரில்லா போரில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுத்து, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா முடிவு செய்தது. குஜராத் மாநில எல்லையில் உள்ள கட்ச் ரண் பகுதி, சாம்ப் _ ஜாரியன், சியால்கோட் பகுதி _ லாகூர் பகுதி ஆகிய மூன்று இடங்களில் இந்தியப் படைகள் ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 5_ந்தேதி, இந்தியாவுக்கு எதிராக அïப்கான் போர்ப் பிரகடனம் செய்தார்.
இந்தியா _பாகிஸ்தான் போர் முழு வீச்சில் நடந்தது. இந்தியப் படைகள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானில் நுழைந்து, லாகூரை நெருங்கின. விமானங்களும் குண்டு வீச்சு நடத்தின. 9 லட்சம் இந்திய வீரர்கள் இந்தப்போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் பாகிஸ்தான் படைகள் பெரும் தோல்வியைச் சந்தித்துப் பின்வாங்கின.
பாகிஸ்தானின் பல ராணுவத் தளங்கள், குண்டு வீச்சில் நாசம் அடைந்தன. இந்தச் சமயத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை எச்சரித்து, சீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வடகிழக்கு எல்லைப்பகுதியில் (நேபா) குவித்து வைத்துள்ள படைகளை இந்தியா 48 மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்பதே சீனா விடுத்த எச்சரிக்கை.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் போரில் குதிக்கும் என்பதே, சீனா விடுத்த அறிவிப்பின் உள் அர்த்தமாகும். இதுவரை நடுநிலைமை வகித்து வந்த ரஷியா, சீனாவின் மிரட்டலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்தது. “இந்தியாவை மிரட்டுவது பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளிப்பதாகும். எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றும் செயலை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா _ பாகிஸ்தான் போரில் சீனா தலையிட்டால், ரஷியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது” என்று ரஷிய கம்ïனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரஸ்நேவ் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே ஐ.நா. சபை செப்டம்பர் 21_ந் தேதி கூடி, போரை உடனே நிறுத்தும்படி இந்தியாவையும், பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இரு தரப்புப் படைகளும் போரை உடனே நிறுத்தி விட்டு, ஆகஸ்ட் 25_ந்தேதி இருந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. தீர்மானத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. 18 நாட்களாக நடந்த யுத்தம் செப்டம்பர் 22_ந்தேதி ஓய்ந்தது. இரு தரப்புப் படைகளும் ஆகஸ்ட் 25_ந்தேதி இருந்த இடத்துக்குப் பின்வாங்கிச் சென்றன.
(mli)